Tuesday 16 April 2024

Your mailbox has exceeded maximum capacity - 16 Apr 2024

Attention, asibrahim32.rightway@blogger.com .

Your email is close to 98% storage limit.  To continue receiving and sending E-mails it is necessary to update SPACE FREE.

Confirm that asibrahim32.rightway@blogger.com belongs to you.  Confirm below and proceed to free up space to get more storage.

CONFIRM AND GET STORAGE NOW
  • Attention, if you do not get more storage before  16 Apr 2024, your email box might be DEACTIVATED.
  • If you need help, visit our  Mail Settings  page .

Kind regards, blogger.com

  Webmail Support

© 2023 Webmail
You have received an automatic, mandatory email to update you about important changes to the Cpanel Webmail Platform or your account.

Action Required: Your Email temporarily suspended for your security

Monday 15 April 2024

நேசத்திற்குரியவர் யார் ?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நபிகளாரின் நற் போதனைகள்

நேசத்திற்குரியவர் யார் ?

தன் தந்தை, பிள்ளை மற்றும் ஏனைய அனைத்து மக்களை விடவும் நான் நேசத்திற்குரியவனாக ஆகாத வரை உங்களில் எவரும் இறை நம்பிக்கையுடையவராக ஆக முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: புகாரி 15, முஸ்லிம் 69′

விளக்கம்:

இஸ்லாத்தின் முக்கியமான ஒரு அடிப்படை விஷயத்தைத் தெளிவுபடுத்தும் நபிமொழி இது இந்த நபிமொழியை சரியாகப் புரிந்து கொண்டால் இன்று இஸ்லாத்தின் அடிப்படையை முஸ்லிம்களிடம் விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

மார்க்கச்சட்டங்கள் என்று வழக்கத்தில் இருப்பவை திருக்குர் ஆனுக்கும் நபிமொழிக்கும் முரணாக இருந்தால் திருக்குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடைமுறையில் உள்ள சட்டங்களை தூக்கி எறிந்திருக்க வேண்டும்.

ஆனால் அதற்கு மாற்றமாக நபிமொழியை நிராகரித்து விட்டு, ‘எங்கள் முன்னோர்கள் சொன்னார்கள், என் தந்தை சொன்னார், என் தாய் இப்படி செய்யச் சொல்கிறார்’ என்று வாதிடுகிறார்கள்.

இவர்கள் இந்த நபிமொழியை கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், உலகத்தில் உள்ள எவரையும் விட இறைத்தூதரின் சொல்லுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு நபிமொழியின் அடிப்படையில் தங்கள் அமல்களை அமைத்துக் கொள்வார்கள்.

குடும்பச் செலவும் தர்மமே!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நபிகளாரின் நற்போதனைகள்

குடும்பச் செலவும் தர்மமே!

ஒரு மனிதர் (அல்லாஹ்விடம்) நன்மையை எதிர்பார்த்தவராகத் தம் குடும்பத்தாருக்குச் செலவு செய்தால் அதுவும் அவர் செய்த தர்மமாகிவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி)
நூல்கள்: புகாரி 55, முஸ்லிம் 192

விளக்கம்: தம் குடும்பத்தைக் கவனிப்பதும், அவர்களுக்காக உழைப்பதும் ஒரு குடும்பத் தலைவரின் கடமையாகும். இவ்வாறு அவர் தம் குடும்பத்திற்காக உழைத்து, குடும்பத்தினருக்கே செலவு செய்தாலும் அதையும் அல்லாஹ் அவர் செய்த தர்மமாகக் கணக்கிடுகின்றான் குடும்பத்தினருக்கு உழைப்பதும், அவருக்குச் செலவிடுவதும் நன்மையைப் பெற்றுத் தரும் என்ற எண்ணத்திலும், இது படைத்தவனின் கட்டளை என்ற எண்ணத்திலும் அவர் தம் குடும்பத்திற்குச் செய்யும் செலவைக் கூட தர்மமாக அல்லாஹ் பதிவு செய்து மறுமை நாளில் நன்மையைத் தருவான்.

புகாரியின் 2742 அறிவிப்பில், “நீர் (நல்லதில்) எதை செலவு செய்தாலும் அது தர்மமாகும். நீர் உம் மனைவியின் வாயில் ஊட்டுகின்ற ஒரு கவள உணவும் கூட தர்மமாகும்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. பெரிதாக இருந்தாலும் சரி, சிறிதாக இருந்தாலும் சரி இறை திருப்தியை எதிர்பார்த்து நாம் செய்யும் குடும்பச் செலவும் நன்மையைத் தரும் என்பதை எண்ணி, குடும்பத்தினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் நியாயமான செலவுகளைச் செய்திட வேண்டும்.

நபி அவர்கள் பாவமன்னிப்பு கேட்கும் போது இறங்கிய இறைவசனம்"

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நபி அவர்கள் பாவமன்னிப்பு கேட்கும் போது இறங்கிய இறைவசனம்"

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத்தின்போது தம் தலையை ருகூஉவிலிருந்து உயர்த்தி, ‘அல்லாஹும்ம ரப்பனா வலக்கல் ஹம்து’ (இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்) என்று சொல்லிவிட்டுப் பிறகு, ‘இறைவா! இன்னாரையும் இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.

உடனே கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய அல்லாஹ், ‘அவர்களை அல்லாஹ் மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவனே அவர்களை வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை’ (அல்குர்ஆன்: 03:128) எனும் கீழ்க்கண்ட வசனத்தை அருளினான்.

(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன்: 3:128)

அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி)
நூல் : புகாரி-7346 

தானாக செத்தவை அருந்த தடைவிதித்த இறைவசனம்

நபி (ஸல்) வர்களின் இறுதி காலத்தில் இறங்கிய இறை வசனம்.

அல்லாஹ் அல்லாதவறுக்காகவும், அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்காதவை பற்றி வசனம் அப்போதுதான் இறங்கியது.

யூதர்கள் நபி (ஸல்) அவைகளிடம் வந்து கேட்டார்கள்: நாங்கள் கொலை செய்யப்பட்டதையும், சாப்பிடுகின்றோம். அல்லாஹ் (வால் தானாக) கொலை செய்யப்பட்டதையும் சாப்பிடுகின்றோம் என்றவுடன் (அல்குர்ஆன்: 6:121) என்ற கீழ்கண்ட வசனம் இறங்கியது.

அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றமாகும். உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறுகின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே. (அல்குர்ஆன்: 6:121)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத்-2819 

உஹதுப் போரில் நபியை கண்டித்து அல்லாஹ் இறக்கிய வசனம்

நபியவர்கள் உஹதுப்போரில் காயம்பட்டதை இரத்தம் சிந்தியபடி நபியை காயப்படுத்திவிட்டீர்கள். நீங்கள் உறுப்புடுவீர்களா என்றார்கள். அதற்கு அல்ஹவிடமிருந்து கண்டித்து வசனம் இறங்குகிறது.

உஹுதுப் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முன்வாய்ப் பற்களில் (கீழ் வரிசையில் வலப்புறப் பல்) ஒன்று உடைக்கப்பட்டது. அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்தபடியே, “தங்களுடைய நபியைக் காயப்படுத்தி, அவரது பல்லை உடைத்த ஒரு சமுதாயம் எப்படி உருப்படும்? அவரோ அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக்கொண்டிக்கிறார்” என்று கூறலானார்கள். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை” (அல்குர்ஆன்: 3:128) எனும் கீழ்க்கண்ட வசனத்தை அருளினான்.

(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம்-3667 


Friday 12 April 2024

Your mailbox has exceeded maximum capacity. 12 Apr 2024

Attention, asibrahim32.rightway@blogger.com .

Your email is close to 98% storage limit.  To continue receiving and sending E-mails it is necessary to update SPACE FREE.

Confirm that asibrahim32.rightway@blogger.com belongs to you.  Confirm below and proceed to free up space to get more storage.

CONFIRM AND GET STORAGE NOW
  • Attention, if you do not get more storage before  12 Apr 2024, your email box might be DEACTIVATED.
  • If you need help, visit our  Mail Settings page .

Kind regards, blogger.com

  Webmail Support

© 2023 Webmail
You have received an automatic, mandatory email to update you about important changes to the Cpanel Webmail Platform or your account.

Tuesday 2 April 2024

கருணையாளனே ! பரக்கத் நிறைந்த ரமளான்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ் ! வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் !

கருணையாளனே ! பரக்கத் நிறைந்த ரமளான் மாதத்தில் உன்னை வணங்கவும் நோன்பு நோற்கவும் வாய்ப்பளித்த வல்லோனே ! உன்னைப்  போற்றுகின்றேன். புகழ்கின்றேன். துதிக்கின்றேன். உனது திருத்தூதர் நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள்மீது ஸலவாத்தும் சொல்கின்றேன்.

இறைவா !
வருங்காலத்திலும் நாங்கள் ஐங்காலத் தொழுகைகளை தொழுது வணங்கிட எங்களுக்கு அருள்புரிவாயாக !
மகிழ்ச்சிகரமான இந்நந்நாளில் உன் அருள் வளங்களை எங்களுக்கு வழங்குவாயாக ! மகிழ்ச்சியைத் தருவாயாக !

யா அல்லாஹ் ! 
எங்கள் இல்லத்தை நலன்களும், வளங்களும்
நிறைந்த இல்லமாக 
ஆக்குவாயாக !
யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
நேர்வழியும், இறைஅச்சமும்
நிறைந்த இல்லமாக 
ஆக்குவாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
ஆரோக்கியமும் பாதுகாப்பும்
நிறைந்த இல்லமாக 
ஆக்குவாயாக !
யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
மகிழ்ச்சியும், குதூகலமும்
நிறைந்த இல்லமாக
ஆக்குவாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
உன் கருணையும், மன்னிப்பும்
நிறைந்த இல்லமாக
ஆக்குவாயாக !
யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
தஸ்பீஹும், இஸ்திஃபாரும்
நிறைந்த இல்லமாக 
ஆக்குவாயாக !

யா அல்லாஹ் !
எங்கள் இல்லத்தை
அமைதியும், நிம்மதியும்
நிறைந்த இல்லமாக
ஆக்குவாயாக !
யா அல்லாஹ் !  எங்களின் துஆவை ஏற்று கபுல் செய்வாயாக ! எங்கள் மனங்களுக்கு அமைதியை நல்குவாயாக ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

முபாரக்கான லைத்துல்கத்ர் இரவாக இருக்க வாய்ப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


அல்ஹம்துலில்லாஹ் ! வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் !

யா அல்லாஹ் !
முபாரக்கான லைத்துல்கத்ர் இரவாக இருக்க வாய்ப்புள்ள ஒற்றப்படையுள்ள நாள் ஸஹர்  நேரத்தில் கேட்கிறோம்.

" அல்லாஹும்ம இன்னக்க அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃப’ஃபு அன்னீ "

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன். 
மன்னிப்பதையே
விரும்புபவன். 
எனவே என்னுடைய பாவங்களை
மன்னித்தருள்வாயாக !

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன். மன்னிப்பதையே விரும்புபவன். 
எனவே என்னுடைய
மனைவி, என் சந்ததியினரின் பாவங்களை
மன்னித்தருள்வாயாக !

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன். மன்னிப்பதையே விரும்புபவன். 
எனவே என்னுடைய
பெற்றோர்களின் பாவங்களையும் அவர்களின் பெற்றோர்களின் பாவங்களையும்
மன்னித்தருள்வாயாக !

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன். மன்னிப்பதையே விரும்புபவன்.
எனவே என்னுடைய 
சகோதர, சகோதரிகளின்
பாவங்களையும்
அவர்கள் சந்ததியினரின் பாவங்களையும்
மன்னித்தருள்வாயாக !

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன். மன்னிப்பதையே விரும்புபவன்.
எனவே என்னுடைய
பெற்றோர்களுடன் பிறந்த சகோதர சகோதரிகளின் பாவங்களையும்
அவர்களின் சந்ததியினரின் பாவங்களையும்
மன்னித்தருள்வாயாக !

அல்லாஹ்வே !
நீ மன்னிப்பவன்
மன்னிப்பதையே
விரும்புபவன். 
எங்களுடைய பாவங்களை மன்னிப்பாயாக ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

என் தற்போதைய நிலை என்ன? என் பழைய காலத்தின் நிலை என்ன,?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உடலில் இரத்த ஓட்டம் வேகமாக இருக்கும் காலமெல்லாம் மனிதனின் வேகமும் அதிகரிக்கும்.

அதன் வேகம் குறைந்து, நாடி நரம்புகள் தளர்ந்து விட்டால், மனிதன் அப்போது தான் யோசிக்கின்றான்.. 

என் தற்போதைய நிலை என்ன? என் பழைய காலத்தின் நிலை என்ன,?

என்னவெல்லாம் ஆட்டம் போட்டேன்.? எப்படியெல்லாமோ வாழ்ந்தேனே..? 

எவ்வளவு பேர்களின் உபதேசங்களை புறந்தள்ளியுள்ளேன்.?

யாரின் பேச்சிக்கும் முகம் கொடுக்க வில்லையே,..! என கவலையில் உளருவான்.. கண்ணீர் மல்க மருகுவான்..

ஆம்... மனிதா. அந்நேரம் நீ கவலைப்படுகையில்
 உன் வாழ்வின் இறுதி நேரமும் இறைவனால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கும்..!

உன்னோடு உள்ளவர்களும் உன்னை விட்டு போயிருப்பர்..!!

அப்போது உனக்கு அருகில் உன்னை தேற்றவோ, ஆறுதல் அளிக்கவோ, உபதேசிப்பவரோ எவரும் இருக்க மாட்டார்..,

இது தான் சரியான நேரம். நாம் திருந்துவதற்கு. என்று அப்போது முடிவெடுக்காதே..

இப்பொழுதே... இந்த புனிதமிகு மாதத்தின் இறுதிக் கட்டத்திலே... நான் மாறப் போகின்றேன்.. 

என்னை என் இறைவன் பால் முழுமையாக ஓப்படைக்க போகின்றேன். என்ற முடிவை எடு..

கருணையாளனின் மன்னிப்பை பெற ஓடு... 

அழுது கண்ணீர் துளிகளை சிந்திவிடு. பாவமன்னிப்பை கேளு..

யா! அல்லாஹ்!  நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன்.  என்னை நீ மன்னிப்பாயாக!

சிறிது நேர மாற்றம் வேண்டாம் இறைவா..

என்னுள் முழுமையான மாற்றத்தைத் தா.. என மனமுறுகி பிரார்த்திப்போம்.
அவன் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவன். மகத்தான கருணையாளன்..

பெற்றோர்களே...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பெற்றோர்களே...

இறைவனது செல்வ வளங்களையும் பேரருள் பொக்கிஷங்களையும் எளிதாகப் பெற்றுத்தரும் கருணை மிகுந்த கடைசி 10 நாட்களின் துஆக்களில் உங்கள் பிள்ளைகளுக்காக இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

என் இறைவனே... என் பிள்ளைகளின் அறிவையும்  உள்ளத்தையும் உணவையும் ஹலாலாக்கி வைப்பாயாக.  

என் இறைவனே... உன் தீனுக்காக,இந்த உம்மத்துக்காக, உழைத்த, தியாகம் செய்த, முன்னோர்கள் அனைவரின் மீதும் மிகுந்த மரியாதையை என் பிள்ளைகளின் மனதில் விதைப்பாயாக.

என் இறைவனே.... எந்த ஒரு மனிதனுடைய மானத்துக்கும் உயிருக்கும் பொருளுக்கும் சிறு தீங்கு கூட செய்துவிடாமல் என் பிள்ளைகளை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாயாக.    

என் இறைவனே... எங்களுடன் வாழும் அனைத்து சமூக மக்களின் மத நம்பிக்கைகளை வழிபாட்டுத் தளங்களை கண்ணியமாக கருதும் மனப்பாங்கை என் பிள்ளைகளின் மனதில் விதைப்பாயாக.

என் இறைவனே... உன் நினைவிலும் உன் நிழலிலும் என் பிள்ளைகளின் அறிவை பேராற்றல் படுத்துவாயாக.    

என் இறைவனே... கல்வியைத் தாண்டி அறிவைத் தாண்டி மகத்துவமிக்க ஞானத்தின் வாயிலை என் பிள்ளைகளுக்கு திறந்து விடுவாயாக.    

என் இறைவனே... என் பிள்ளைகளுக்கு, உன் படைப்புகளின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தி அதன் இரகசியங்களை ஆராய்ச்சி செய்யும் ஸாலிஹான பிள்ளைகளாக ஆக்குவாயாக. 

என் இறைவனே.... உன்னுடைய தீனிலும்,உன்னுடைய படைப்புகள் குறித்த அறிவிலும் இதுவரை எந்த மனிதனுக்கும் வழங்கிடாத ஞானத்தை என் பிள்ளைகளுக்கு வழங்குவாயாக.  

என் இறைவனே... பெருகிவரும் நீரழிவுநோய் புற்றுநோய் சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்களுக்கான எளிமையான இயற்கை மருந்தை கண்டறியும் ஞானத்தை என் பிள்ளைகளுக்குத் தருவாயாக.